Monday 28 September 2015

விரைவுப் பாதை



மார்தட்டிக்கொண்ட மயானத்தின் எல்லையில்
இழைந்திருந்த இருட்டுக்குள்
நடைபயின்ற ஊதல்காற்றும்

சற்று நேர அளவலாவலும்
பின்னர் பெருங்கூச்சலும்
இடையிடையே கூன் நிமிர்த்தும் அமைதியும் கலந்து

என்றோ தொடங்கி இன்று மாலை வரை
எரிந்த சடலங்களில் குடியிருந்த ஆத்துமாக்கள்
தான் மனிதனாய் பிறந்து
மிருகமாய் பிறழ்ந்த
பரிதாபக் கதைகளை கலந்துரையாடி

கூத்தாடும் கிளர்ச்சி மிகு வேளையின்
சுவாசமற்ற பிரேத நொடிகளையும்
அதனுள் மிதக்கும் அனர்த்த கணங்களையும்
அழுத்தம் மிகு சோக ரணங்களையும் அறியாது

பல மனித மிருகங்கள்
இளஞ்சிறாருக்கு
இன்னது கற்பிக்கலாமெனும் வரைமுறையின்றி

போதை வஸ்துக்களை கொடுத்தும்
பாலியல் கொடுமைகளால் சிதைத்தும்
தமக்கொரு விரைவுப் பாதையை
சிருஷ்டித்துக் கொண்டிருந்தன

No comments:

Post a Comment