கருத்து மேடை
ஆங்கில அறிவியல் சார்ந்த திரைப்படங்களில் மனித சமூகத்தை எதிர்காலத்தில்
கம்ப்யூட்டர் ஆளும், இயந்திரங்கள் ஆளும், வேற்று கிரகவாசிகள்
ஆள்வார்களென கதைகள் வருவதுண்டு.
தமிழில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா தனது ஜீனோ, மீண்டும் ஜீனோ ஆகிய
கதைகளில் அதே போன்று ஒரு கருத்தை சொல்லி இருப்பார்.
நம்மை ஆளுமை செய்ய வரும் கம்ப்யூட்டர் அல்லது இயந்திரம் அல்லது வேற்று
கிரகவாசிகள், அல்லது வேறு ஏதோ ஒன்று ஏன் நம்மை போன்று அல்லது நம்மைவிட மேலாக சிந்திக்கும்
திறன் கொண்டதாக இருக்கவேண்டும்?
இன்று அகிலம் முழுதும் நம்மையாளும் பணம் ஏன் அவற்றில் ஒன்றாக இருக்கக்கூடாது? பணம் நமது அனைவரது
சிந்தனையிலும் புகுந்து படர்ந்து இன்று முழுதுமாக ஆக்கிரமித்து விட்டதல்லவா? பணமில்லாத வாழ்க்கையை
உலகத்தை நம்மால் நினத்துப் பார்க்க முடிகின்றதா?
பண்டமாற்றுக்காக உருவாக்கப்பட்ட பணமென்னும் ஒன்று இன்று அகிலம் முழுதும் நம்மை
ஆட்சி செய்கின்றதல்லவா? பணம் உருவாவததற்கு முன்பாக அகிலத்தை ஆண்ட அன்பென்னும்
ஆயுதத்தையும் இன்று பணம் அழித்துக்கொண்டிருக்கிறதல்லவா?
உங்கள் எண்ணங்களை பகிருங்கள் தோழமைகளே!
மஹா சுமன்'s photo.
72 Likes100 Comments
Like
Comment Share
Arokia Britto, தீதும் நன்றும்,
Manikandan Alagar and 69 others like this.
Nandhu Kumar பணத்திடம் எல்லாமும்
சமர்ப்'பணம்'.
Unlike · Reply · 2 · August
22 at 3:03pm
Badulla Arul மனிதனை ஆளுமை செய்யும்
இயந்திரம்,பணம், இப்படி எதை பற்றி பேசினாலும் மனித சிந்தையில் உதித்தவைகளே இது.நம்மை ஆளுமை
செய்யும் நோட்டுகள் தான் நம் பாதைகளை தீர்மானம் செய்கின்றதெனினும் அன்பினது ஆழ
வேர்கள் அடிமனத்தை இறுக்கி பிடிக்கும் போது பணத்தினது மதிப்புக்கேது பெருமை?
ஆயினும் ஒன்றையொன்று ஆளுமை செய்யும் இவ்யுகந்தனில் அன்பிற்கும் கொஞ்சம்
இடமுண்டென்பது எதனையும் அன்பினால் கட்டிப்போடலாம் என்பதை தவிர வேறென்ன இருக்க
முடியும்.
Unlike · Reply · 4 · August
22 at 3:11pm
Srimathi Jayanthi எது புழக்கத்தில்
அதிகம் இருக்கிறதோ அதன் பின்னேதான் மக்களும். படிப்பிலிருந்து மருத்துவம், பொழுதுபோக்கு, வீட்டு அத்யாவசிய
தேவைகள் என அனைத்தும் பணம் இல்லாமல் பெற முடியாது இக்காலத்தில்.
Unlike · Reply · 2 · August
22 at 3:18pm
Bakki Yaraj panam patthum seiyum!,but Anbu anaithum
seiyum!!,.
Unlike · Reply · 1 · August
22 at 3:22pm · Edited
Srimathi Jayanthi அன்பு அனனை தந்தையிடம்
கூட விலை பேசப்படும் நிலைதான்.பணம் மட்டுமே உலகத்தை ஆட்சி செய்கிறது. துறவிக்குக்
கூட தேவைக்கேற்ப பணம் இருந்தால்தான் மதிப்பு
Unlike · Reply · 2 · August
22 at 3:24pm
Bakki Yaraj replied · 1 Reply
Suseela Murthy கங்கை நதிப்புறத்து
கோதுமைப் பண்டம்
காவிாி வெற்றிலைக்கு
மாறு கொள்வோம் என்ற ...See More
Unlike · Reply · 4 · August
22 at 3:53pm · Edited
Ananth Kesav மிகச்சிறந்த கருத்து
.. ஆனா பணத்தை சாப்பிட முடியாது.. ரத்தத்திற்கு பதிலாக பணத்தை உடம்பில்
ஏற்றிக்கொள்ள இயலாது ..
Unlike · Reply · 4 · August
22 at 3:52pm
Suseela Murthy இறைவனேயானாலும் எழும்
பசியை உணவால் தான் தீா்க்க முடியும் ... ஆத்துக்குள்ளே நின்று ஆரோகரா சொன்னாலும்
சோற்றுக்குள் உள்ளது சொா்கம் .... உள்ள கடவுள் கல்லடா .. ஊா்சுற்றும் கடவுள்
உலோகமடா .. பேசும் கடவுள் நீயடா நானடா ... பெருங்கடவுள் சோறடா ...என்ற பழைய பாடல்
ஒன்று நினைவுக்கு வருகிறது ... பலாின் சிந்தனைக் குதிரையை எழுப்பி விட்டீா்கள்
இந்தப் பதிவின் மூலம் .. நன்றி
Unlike · Reply · 6 · August
22 at 3:59pm
மஹா சுமன் மிக அருமையான கருத்துக்களை பகிர்ந்தீர்கள் நட்புக்களே. நன்றி.
நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. பணத்தைக்கொண்டு பசியாற்ற முடியாது. ஆனால் இன்று
இவ்வுலகத்தில் வயிற்றுப் பசி மட்டுமே பிரதானமாக இல்லையே. வயிற்றுப்பசியில்
துடிக்கும் சோமாலிய நாட்டுப் பிரஜைகளை கண்டு கொள்ள நாதியில்லை. ஆனால் அபரிமித
செல்வத்தில் திளைத்து ஆடம்பர வாழ்க்கை வாழத்தானே அத்துணைபேரும் ஆவலுருகிறார்கள்
Like · Reply · 4 · August
22 at 4:07pm
Suseela Murthy ஆரம்பர வாழ்க்கை
வாழ்பவா் பத்து நாட்கள் உணவில்லை என்றால் உணா்வாா் ... பசியா பணமா என்று
Unlike · Reply · 2 · August
22 at 4:11pm
மஹா சுமன் பணமிருந்தால் பசியற்ற நிலைதானே எங்கும். பணத்துக்கு பசியும்
அடிமையாகிவிட்டதே
Like · Reply · August 22 at 4:11pm
புதுமை தமிழினி இல்ல அண்ணா,,
பணத்தின் ஆளுமை இந்த நூற்றாண்டோடு முடிவுக்கு வந்துவிடும்,,
அடுத்த தலைமுறை ஆளப்போவது மிஞ்சி நிற்கும் கொஞ்ச அளவிலான இயற்கை வளங்களே,,...See
More
Unlike · Reply · 5 · August
22 at 4:12pm · Edited
Logini Sun replied · 2 Replies
மஹா சுமன் அவ்வாறான நிலை விரைந்து வரவேண்டுமென்றே மனம் ஆவலுருகின்றதம்மா
புதுமை தமிழினி
Like · Reply · 4 · August
22 at 4:13pm
புதுமை தமிழினி கண்டிப்பா வரும் பாருங்கணா!
Unlike · Reply · 1 · August
22 at 4:13pm
மஹா சுமன் வியாபரமே உலகென்று ஆகிப் போனதால்தான் இந்த இழிநிலை அல்லவா
Like · Reply · 3 · August
22 at 4:13pm
மஹா சுமன் மேடம் Suseela Murthy சொன்னது போல்
உழைப்பவன் உண்ணவேண்டும். உண்ணவேண்டுமெனில் உழைக்கவேண்டுமெனும் நிலை உருவாக
வேண்டும்
Like · Reply · 4 · August
22 at 4:14pm
மஹா சுமன் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ். பணமற்ற ஒரு நிலை
உலகில் உருவானால் என்னாகுமென்று. வாசிக்கும்போதே தித்தித்தது
Like · Reply · 5 · August
22 at 4:15pm
மஹா சுமன் ஜி Ananth Kesav ரத்தத்தையும் உணவையும்
வாங்கிக்கொள்ள பநம் இருந்தால் போதுமே
Like · Reply · 2 · August
22 at 4:16pm
View previous replies
மஹா சுமன் அப்படிப்பட்ட நிலை வருமா ஜி?
Like · Reply · 1 · August
22 at 4:24pm
View more replies
மஹா சுமன் அன்பை எடுத்துக்காட்ட மனித நேயத்தை விளக்க இன்று எங்கோ ஒரு நிகழ்வை
எடுத்துக்காட்ட வேண்டிய சூழல் நமக்கு சாபக்கேடுதானே நண்பா Bakki
Yaraj
Like · Reply · 1 · August
22 at 4:17pm
மஹா சுமன் ஆம். இன்று அன்பையும் பணத்துக்காக இழக்கத் தயாராக இருக்கும்
கூட்டம்தானே நாம் மேடம் Srimathi Jayanthi
Like · Reply · 4 · August
22 at 4:18pm
Srimathi Jayanthi replied · 1 Reply
மஹா சுமன் சகோ Badulla Arul அன்பின் ஆழ்வேர்கள்
அடிமனதில் இறுகுமுன்பு பணம் அம்மனதை ஆட்கொண்டு விடும் அவலத்தை என் செய்ய?
Like · Reply · 3 · August
22 at 4:19pm
வானவில்லின் வசந்தம் இதற்கு முதல் காரணம் பெத்தவங்கதான். ஒரு வீட்ல 1 குழந்தை
யாரப்பார்த்து கத்துக்குது? நம்ளப்பாத்துதான
காலைல எந்திரிச்சா அம்மா பரபரப்பா சோத்த ஆக்கி, வீட்டுவேலைய முடிச்சு, அந்த குழந்தைய ஏதோ
கடனேனு புறப்படவெச்சு சோத்த திணிச்சு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறா.
அப...See More
Unlike · Reply · 4 · August
22 at 4:24pm
மஹா சுமன் ஆம் சகோ வானவில்லின் வசந்தம். அன்பை பணம் வென்றுவிட்டதோ என அச்சப்
படுகிறேன்
Like · Reply · 1 · August
22 at 4:28pm
வானவில்லின் வசந்தம் பயமே வேண்டாங்க அதேதான்
Unlike · Reply · 1 · August
22 at 4:37pm
Sumi Bose இல்லாரை எல்லாரும்
எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.- திருக்குறள்
Unlike · Reply · 1 · August
22 at 4:42pm
Sumi Bose பொருள் :-
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.
Unlike · Reply · 1 · August
22 at 4:43pm
Sumi Bose உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென...See More
Unlike · Reply · 1 · August
22 at 4:45pm
மஹா சுமன் உண்மை நட்பே Sumi Bose. பணத்திற்கு எதிராக
புரட்சி வெடிக்கவேண்டுமோ, மனிதத்தையும் அன்பின் ஆளுமையை மீட்டெடுக்கவும்?
Like · Reply · 2 · August
22 at 4:54pm
Sumi Bose பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது ...See More
Unlike · Reply · 3 · August
22 at 4:54pm
Sumi Bose மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம் ...See More
Unlike · Reply · 1 · August
22 at 4:58pm
மஹா சுமன் நட்பே Sumi Bose பணத்தை பிரிப்பது
குணம். அப்படிப்பட்ட குணங்கள் இன்று பணத்தால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன எனத்
தோன்றுகின்றது
Like · Reply · 1 · August
22 at 5:03pm
Sumi Bose கல்லாப்பெட்டியில்
மறைத்த சொந்தம்
என்பை பணம் பார்த்தே.. ...See More
Unlike · Reply · 1 · August
22 at 5:05pm
மஹா சுமன் ஜி Ananth Kesav உங்கள் நேர்மறை
சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. எப்போதும் பிடிக்கும். ஆனாலும் இப்போது
சொன்னது நடைமுறைப்படுமா என தயக்கம் வருகின்றது. ஏனெனில் நாம் அறிவியல் முன்னேற்றம்
எனச் சொல்லி வெகு வேகமாக வாழ்க்கையை புரட்டிப் போட்டுக்கொண்டு இருக்கி...See More
Like · Reply · 2 · August
22 at 5:05pm
Sumi Bose மனிதனைவிட மதிப்பு
பணத்திற்கே
மனிதம் மறைவதும் பணத்தாலே
மாறினால் இந்நிலை மகிழும் மனம் !
Unlike · Reply · 1 · August
22 at 5:07pm
மஹா சுமன் அன்புத் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள். கருத்து மேடையில் உங்கள்
கருத்துக்களை ரிப்ளை கமெண்டில் பதிய வேண்டாம். அனைவரும் படிக்க ஏதுவாக பொதுவான
கமெண்டில் இடவும்
Like · Reply · 2 · August
22 at 5:12pm
Ananth Kesav இதுக்கு ஒரு உண்மைச்
சம்பவம் உதாரணம் சொல்லனும்.. எனக்கு தெரிஞ்ச பணக்காரர் தன் பணபலத்தால.. ஊரையே
அடிச்சு உலைல போட்டார்.. அவருக்கு ஒரு பெரிய கஷ்டண் வந்துச்சு.. தன் மகனுக்கு
ரெண்டு கிட்னியும் பெய்லியர்.. எவ்வளவு பணம் தர தயாரா இருந்தும் அவர் மகனுக்கு
யாரும்...See More
Unlike · Reply · 3 · August
22 at 5:12pm
மஹா சுமன் அப்படியா ஜி Ananth Kesav. மகிழ்ச்சியைத்தான்
தருது. அதுவே அவர் பணத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்திருந்தால் குலம்
தழைத்திருக்கும். நல்ல தகவல் ஜி
Like · Reply · 4 · August
22 at 5:14pm
அருள் குமரன் அன்புகூட பணம்அதிகமாகக்கொடுப்பவர்க்கே அதிகமாய்க்கிடைக்கிறது.
Unlike · Reply · 3 · August
22 at 5:14pm
மஹா சுமன் ஆம் நண்பரே
அருள் குமரன். இதுதான் இன்றைய யதார்த்தம்
Like · Reply · 1 · August
22 at 5:14pm
Sumi Bose அடிப்படை கலவிபெறவும்
பல லட்சங்கள்
ஆரம்ப பள்ளிகளில் சேர்த்திட பல லட்சங்கள்
கல்லூரியில் சேர்த்திடவும் பல லட்சங்கள் !
Unlike · Reply · 1 · August
22 at 5:17pm
மஹா சுமன் ஆம் நட்பே Sumi Bose அனைத்திலும் வியாபாரமே
என வாழும் மனிதர்கள்
Like · Reply · 1 · August
22 at 5:23pm
Sumi Bose கோடி கோடி கோடியென
கோரப்பசி வேளையிலே
பணத்தை உண்ண முடியுமோ?
Unlike · Reply · 1 · August
22 at 5:24pm
மஹா சுமன் எனக்குப் புரியல, எல்லாரும் இதே கேள்வியைத்தான் கேட்கறிங்க, நண்பர் Ananth
Kesav ஜி சொன்னது போல, நண்பர் Bakki Yaraj சொன்னதுபோல
அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் இருக்கின்றன அல்லாது உலகம் முழுமையுமே இன்று
பணத்தை கொண்டு எதையும் வாங்க முடியுமெனத்தானே நினைக்கின்றது?
Like · Reply · 2 · August
22 at 5:26pm
Sumi Bose பணம் மாற்றுகிறதா
குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்? ...See More
Unlike · Reply · 1 · August
22 at 5:26pm
Sumi Bose மகிழ்வையும் மதிப்பையும்
கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
Unlike · Reply · 2 · August
22 at 5:28pm
மஹா சுமன் அது போதுமே நட்பே, இப்போதைய மனிதன் எதிர்பார்ப்பது அவற்றை தானே
Like · Reply · 1 · August
22 at 5:29pm
Sumi Bose பணத்தின் மீது பற்று
இல்லையென்றால்
பணம் சம்பாதிக்க முடியாது ...See More
Like · Reply · August 22 at 5:32pm
மஹா சுமன் பணத்தை மட்டுமே பற்றிக்கொண்டிருந்தால் வாழமுடியாது// இந்தக்
கருத்தைத்தான் Ananth Kesav ஜி சொன்னார்
ஆணித்தரமாக, உதாரணத்துடன். வேறு ஏதாவது உதாரணம் உண்டா? யாரிடமாவது?
Like · Reply · 1 · August
22 at 5:35pm
Rajan Raj தங்கத்தை சுமந்தாலும்
பொற்றோலில்தான் வண்டியோடும் பிடித்த பாடலின் வரி இது இதுதான் என் கருத்தும்
Unlike · Reply · 1 · August
22 at 5:36pm
மஹா சுமன் புரியவில்லை சகோ
Like · Reply · August 22 at 5:37pm
View more replies
Dhanasekar Sekar · 6 mutual
friends
Anbu enpadhu poolei.that's the world. Sorry it's very
true. Good evening.
Dhanasekar Sekar's photo.
Unlike · Reply · 2 · August
22 at 5:45pm
மஹா சுமன் என்றுதான் சொல்லப்படுகின்றது, ஆனால் மனிதன்
பணத்திடம் அடிமைப்பட்டதாகத் தோன்றுகின்றதே சகோ Rajan Raj
Like · Reply · 1 · August
22 at 5:46pm
Rajan Raj replied · 1 Reply
மஹா சுமன் சகோ Rajan Raj சரிதான், பணத்திற்கு தனது
கற்பனா சக்தியை விற்க ஒரு கூட்டமே நம் பின்னால் நிற்கின்றது
Like · Reply · 1 · August
22 at 5:54pm
Rajan Raj replied · 1 Reply
Sumi Bose பணம்
இருந்தால் துன்பமில்லை
இல்லையென்றால் இன்பமில்லை !
Unlike · Reply · 1 · August
22 at 5:54pm
மஹா சுமன் ஆம், இன்றைய நிதர்சனம்
Like · Reply · 1 · August
22 at 5:56pm
மஹா சுமன் மனத்தின் தேவையை இன்று யார் எதிர் நோக்குகின்றார்கள் நட்பே வெண்ணிலா
நிலா
Like · Reply · 1 · August
22 at 6:05pm
Saravanan Karunanithi மனிதனின் கூட்டு
உழைப்பால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ள சமூகத்தில், பண்டமாற்று முறையில்
வளர்ந்து, பண்டத்திற்கு ஈடாக தங்கம் என்று நிலைபெற்று, தங்கத்தைவிட காகிதமே
போதும் என்று உயர்ந்த பிறகு, எந்த பொருளையும் பெற்றிடவும், விற்றிடவும் காகிதப்
பணத்தாள் உ...See More
Unlike · Reply · 4 · August
22 at 6:07pm
மஹா சுமன் நண்பரே Saravanan Karunanithi என் மனதில் இருந்ததை
நீங்கள் எப்படி எழுத்தில் அப்படியே கொண்டு வந்தீர்கள்? எனக்கு மறுப்பே இல்லை
உங்கள் கருத்தில். நன்றி
Like · Reply · 2 · August
22 at 6:10pm
Saravanan Karunanithi welcome to you
Unlike · Reply · 1 · August
22 at 6:10pm
Senrayan Senrayan உண்மைதான், இருக்கலாம்...
Unlike · Reply · 1 · August
22 at 6:35pm
Mohammed Usman மறுக்க முடியாது..
வெறுப்பு மேலிடுகிறது நண்பா!
Unlike · Reply · 1 · August
22 at 6:52pm
பொ.மா.இராஜாராமன் சாத்தூர் பணம் பிண ஆட்சி
செய்கிறது
மனிதத்தை கொன்று ...See More
Unlike · Reply · 1 · August
22 at 7:05pm
Chandru Jayasankaran அருளில்லார்க்கு
அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. -குறள் . எல்லாமும் வணிகமாகிவிட்ட சூழலில் அன்பு
மட்டும் விதிவிலக்கில்லை. அன்பை மெய்பிப்பதற்கு பணமும் அவசியம். தேவைகளை நிறைவு
செய்யப் போதுமானப் பொருளைத் தேடுவோம் மற்றபடி வாழ்வு அன்பாலேயே நிறையட்டும்.
வாழ்க்கைக்கு பணம் தேவை , வாழ அன்பு போதும்.
Unlike · Reply · 1 · August
22 at 8:11pm
மஹா சுமன் ஆம் நண்பரே Senrayan Senrayan அது உண்மைதான், அதனால் பயமே
மேலிடுகின்றது
Like · Reply · August 22 at 8:14pm
மஹா சுமன் ஆம் நண்பா Mohammed Usman, நிகழ்காலமே
இப்படியென்றால் எதிர்காலம்?
Like · Reply · 1 · August
22 at 8:15pm
மஹா சுமன் அண்ணா இராஜாரமன் மனிதம் கொல்லப்பட்டுத் துடிப்பது எனது விழிகளிலும்
தெரிகின்றது
Like · Reply · August 22 at 8:15pm
மஹா சுமன் குறள் சொன்னபோது அன்பின் ஆட்சியே மிகுந்திருந்ததாக நினைக்கிறேன் சகோ
Chandru Jayasankaran. ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை
Like · Reply · 1 · August
22 at 8:16pm
Mohammed Usman மனித சமுதாயத்தின்
எதிரிகாலம்...
பணத்தால் முடியாத பல விஷயங்கள் இவ்வுலகில் நிறைய உள்ளது.. இது மனித அறிவுக்கு எட்டினாலும்
நாம் எல்லாம் பணம் என்னும் மாயக்கயிரால் கட்டுண்டு அதன் பின்னே ஓடிக்
கொண்டிருக்கிறோம்... எல்லாம் அடைந்த பிறகு ஏற்படும் வெறுமை பணம் தாண்...See More
Unlike · Reply · 2 · August
22 at 8:32pm
மஹா சுமன் நன்றி நண்பா Mohammed Usman பணம் தாண்டிய சிந்தனை
நமக்கு உடல் பலம் இருக்கும்போது வருவதில்லை நண்பா, வயதாகி துணை தேடும்
பொழுது வரை பணத்தின் பின்னேதான் ஓடிக்கொண்டிருக்கின்றோம்
Like · Reply · 2 · August
22 at 9:34pm
Mohammed Usman நிர்பந்திக்கப்
பட்டிருக்கிறோமே...
Unlike · Reply · 1 · August
22 at 9:36pm
Mohammed Usman தவிர பணம் நிறைய
சேர்த்த பிறகோ, அல்லது சேர்க்க முடியாது என்றாகும் போதோ பணம் தாண்டிய சிந்தனை மேலோங்குகிறது..
அன்பே பிரதானம் என்றாலும் பிச்சைக்காரர் முதல் பெற்ற பிள்ளை வரை பணம் கொண்டே அன்பை
வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது..
Unlike · Reply · 2 · August
22 at 9:39pm
மஹா சுமன் நிலையற்றவை மீது நிலையாமை கொண்ட வாழ்க்கையை நிலைக்குமென நினைத்தபடி
இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம் நண்பா
Like · Reply · 2 · August
22 at 9:41pm
Mohammed Usman சமூக கட்டமைப்பின்
சீர் செய்ய முடியாத அளவுக்கு புரையோடிப் போய் விட்ட அவலம்...
Unlike · Reply · 1 · August
22 at 9:41pm
மஹா சுமன் அதைத்தான் நான் சொன்னேன், நாம் பணத்தால்
ஆளப்படுகின்றோமென
Like · Reply · 3 · August
22 at 9:42pm
Mohammed Usman வேறு வழியில்லை நண்பா!
பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை வாழ கற்றுக் கொண்ட ஆதி மனிதன் தொடங்கிய பிழை
இது..
Unlike · Reply · 2 · August
22 at 9:44pm
மஹா சுமன் Saravanan Karunanithi சரியாகச் சொன்னார்,
Like · Reply · August 22 at 9:45pm
Mohammed Usman நாடோடி வாழ்க்கை
வாழ்ந்த போது மனிதன் வசதிகள் இல்லாமல் இருந்திருந்தாலும் மனநிறைவு, மகிழ்ச்சியோடு
வாழ்ந்து இருப்பான் என்றே தோன்றுகிறது
Unlike · Reply · 2 · August
22 at 9:46pm
மஹா சுமன் உண்மை நண்பா, அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் அனர்த்தங்களை
கட்டவிழ்த்து விட்டு மனிதனை மனிதன் மதிக்காத, பணத்தை மட்டுமே
பார்த்து மகிழ்கின்ற உணர்வு மேலோங்க வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்
Like · Reply · 3 · August
22 at 9:48pm
Mohammed Usman கூட்டு உழைப்பு முறை
இன்றளவும் கர்நாடக, மஹராஷ்டிர கிராமங்களில் பார்த்து இருக்கிறேன் நண்பா
Unlike · Reply · 2 · August
22 at 9:49pm
Selvam Selvam அன்பை மட்டுமல்ல
உலகில் அனைத்தையும் பணம்
பின்னுக்குத்தள்ளி வெகு நாட்களாகிறது ....See More
Unlike · Reply · 4 · August
22 at 9:49pm
Mohammed Usman இன்னும் சொல்லப்போனால்
கிட்டத்தட்ட அவர்கள் எல்லாம் நூறாண்டு பழமையானவர்கள்
Unlike · Reply · 2 · August
22 at 9:50pm
Mohammed Usman வேளாண்மை, உழைப்பு, குடும்பம், மாடு, வண்டி அவ்வளவு தான்
அவர்கள் உலகம்... கொடுமை என்னவென்றால் அத்தகைய அவர்களின் விளைபொருட்களுக்கு
அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாமை
Unlike · Reply · 2 · August
22 at 9:52pm
சுவர்ணா தேவி பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் எனும் ரகத்தினரைவிட
பணம் பந்தலிலே.. குணம் குப்பையிலே எனும் ரகத்தினரே இப்போது உலகில்
அதிகமாகிவிட்டது. எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற சமத்துவமே இப்போது
உலகைவிட்டு விடைபெறும் காலத்தில் பணம் எனும் சரவாதிகாரியின் ஆட்சியின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
நாம் துரதிஷ்டசாலிகளே.
Like · Reply · 2 · August
22 at 9:56pm
மஹா சுமன் ஆம் நண்பா Selvam Selvam. பணம் நம்மை
ஆளத்தொடங்கி வெகுகாலமாகிவிட்டது. உலகமெங்கு இந்நிலைதான். எப்படி மாற்று வருமெனத்
தெரியாமல் நாம்...
Like · Reply · 3 · August
22 at 10:22pm
மஹா சுமன் நண்பா Mohammed Usman பார்த்தாயா? நாமும் பின்னோக்கி
வாழ்க்கையை கொண்டுபோக முடியுமெனில் பணத்தின் ஆளுமையிலிருந்து விடுபட முடியும்.
ஆனால் நடக்குமா?
Like · Reply · 2 · August
22 at 10:23pm
மஹா சுமன் நட்பே சுவர்ணா தேவி. சரியாச் சொன்னிங்க. நாம் துரதிர்ஷ்டசாலிகளே.
பணமென்னும் விலங்கால் மனம் பூட்டப்பட்டு அடிமைச் சங்கிலியை அறுக்க மனமின்றி
வாட்டத்துடன் இருக்கும் துரதிர்ஷ்டசாலிகள்
Like · Reply · 2 · August
22 at 10:25pm
Selvam Selvam மாற்றம் ஒன்றே
இங்கு மரணமற்றது நண்பா .
மாற்றங்கள்...See More
Unlike · Reply · 3 · August
22 at 10:34pm
Mohammed Usman எப்படி நடக்கும்..
சாப்ட்வேர் என்ஜினீயர் இரண்டு மூட்டை நெல்லுக்கு வேலை செய்யும் நாள் இன்னும்
வரவில்லை நண்பா!
Unlike · Reply · 2 · August
22 at 10:45pm
Bakki Yaraj sariya sonneenga sumi bose
Unlike · Reply · 1 · August
23 at 12:40am
Logini Sun சித்தர் காலக்கியானம்
ஏட்டின்படி ஒருகாலத்தில் உலகம் ஆரம்பகாலத்தில் இருந்த படி மாறினால் பணத்திற்கும்
மதிப்பற்ற நிலை வரும் . சகோ புதுமைத் புதுமை தமிழினி சொன்ன கூற்றுப்படி உலகம்
மீண்டும் பண்டமாற்றில் தங்கிவாழும் , பணத்திற்கு மதிப்பற்று
போகும் . அக்காலத்தைக் காண நாம் இருக்கப்போவதில்லை
Unlike · Reply · 2 · August
23 at 5:44am
மஹா சுமன் நன்றி நட்பே Logini Sun. நாம் அத்தகைய
மாற்றங்களை பார்க்க இருக்கவேண்டுமென அவசியம் இல்லை. ஆனால் நமது சந்ததிகளாவது நல்ல
வாழ்க்கை வாழவேண்டும்
Like · Reply · 1 · August
23 at 5:50am
மஹா சுமன் வெறும் பண்டமாற்றுக்காக உருவான பணம் அடிப்படையில்லாமலே நம்
மனங்களில் ஆழ வேரூன்றி வைரஸ் போல பற்றிப் படர்ந்து இன்று நமது அனைவரின் எண்ணங்களை
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது
Like · Reply · 2 · August
23 at 5:59am
Logini Sun replied · 1 Reply
Devatha Tamil உண்மைதான் வாழ்விற்காக
உண்டாக்கப்பட்ட பணத்திற்காக வாழ்வைத் தொலைக்கிறோம்
Unlike · Reply · 3 · August
23 at 6:38am
Arunachalam Thiyagarajan உண்மை.
பண்டபரிமாற்றத்தை பணபரிமாற்றமாக்கியது மனிதனின் பேராசை. பண்டம் அழுகிடும், பணம்
அழுகுவதில்லை.பண்ட மாற்றத்தில் அன்பு இருந்தது. பணபரிமாற்றத்தில் பொறாமை
இருக்கிறது
Unlike · Reply · 2 · August
23 at 6:46am
மஹா சுமன் ஆமாம் அம்மா Devatha Tamil. மீட்டெடுக்க
வழியில்லையா என வேதனையாகவும் இருக்கின்றது
Like · Reply · 3 · August
23 at 6:48am
மஹா சுமன் அழுகும் பண்டம் அன்பை அழிக்கவில்லை. அழுகாத பணம் அன்பை
அழித்துக்கொண்டிருக்கின்றது ஐயா Arunachalam Thiyagarajan
Like · Reply · 4 · August
23 at 6:48am
ஆதவன் சேதுராமன் நாயர் பிடித்த புலிவால்!!.,என்பார்களே...,அது போல் ஆகிவிட்டதோ
பணம்!!.
Unlike · Reply · 1 · August
23 at 12:43pm
மஹா சுமன் ஆம் அண்ணா. விடவும் முடியாமல் பிடிக்கவும் முடியாமல்
Like · Reply · August 23 at 12:52pm
சி வா எனைப் பொருத்த வரை சமூகப் பார்வை அப்படித் தான் இருக்கிறது..
இருந்தாலும் இன்றும் பலர் பணத்தை ஒரு பொருளாகத் தான் பாவிக்கிறார்கள்.. ...See More
Unlike · Reply · 1 · August
23 at 5:49pm
No comments:
Post a Comment