கவனமில்லா நேரத்தில்
காற்றென் நாசியைத்
தழுவாமல் கடந்தது
நினைவறியா நேரத்தில்
பூஞ்சிறகின் ஸ்பரிசம்
என் செவி மடலை
தொட்டுப் போனது.
கனவுலகின் தொடக்கத்தில்
மழையொன்று
எனை மட்டும்
நனைக்காமல் பெய்தது.
விடிவெள்ளியைத் தேடிய
விழியிரண்டில்
கருமைத் திடல்
காட்சியே படர்ந்தது.
ஆற்றாமையால் நான்
ஆறுதல் கொடி தேடி
அவசரமாய்
அன்றே தொலைந்து போனேன்.
No comments:
Post a Comment