Wednesday 30 September 2015

தொலைந்து போனேன்

கவனமில்லா நேரத்தில்
காற்றென் நாசியைத்
தழுவாமல் கடந்தது


நினைவறியா நேரத்தில்
பூஞ்சிறகின் ஸ்பரிசம்
என் செவி மடலை
தொட்டுப் போனது.


கனவுலகின் தொடக்கத்தில்
மழையொன்று
எனை மட்டும்
நனைக்காமல் பெய்தது.


விடிவெள்ளியைத் தேடிய
விழியிரண்டில்
கருமைத் திடல்
காட்சியே படர்ந்தது.


ஆற்றாமையால் நான்
ஆறுதல் கொடி தேடி
அவசரமாய்
அன்றே தொலைந்து போனேன்.

No comments:

Post a Comment