தஞ்சமடி
கருத்த இமை விசிறி
விழியோ வெண்மைத்திரி
கருணை மழை பொழியும்
கருமணியோ காந்தமடி
ஓரப்பார்வை வழி
உள்ளம் நுழைந்தபடி
மனதிருளை துடைத்தெறியும்
நீயே எந்தனொளி
சிறுத்த நாசியடி
சிவந்த அதரமடி
இதயச் சிறையமர
வேறென்ன வேண்டுமடி
கன்னக் கதுப்புக் கனி
கவிதை யுந்தன் மொழி
காதல் கொண்டுவுனில்
நானே தஞ்சமடி..!
No comments:
Post a Comment