Monday 21 September 2015

தஞ்சமடி
























கருத்த இமை விசிறி
விழியோ வெண்மைத்திரி
கருணை மழை பொழியும்
கருமணியோ காந்தமடி

ஓரப்பார்வை வழி
உள்ளம் நுழைந்தபடி
மனதிருளை துடைத்தெறியும்
நீயே எந்தனொளி

சிறுத்த நாசியடி
சிவந்த அதரமடி
இதயச் சிறையமர
வேறென்ன வேண்டுமடி

கன்னக் கதுப்புக் கனி
கவிதை யுந்தன் மொழி
காதல் கொண்டுவுனில்

நானே தஞ்சமடி..!

No comments:

Post a Comment