Friday, 18 September 2015

பாய்ச்சிடடி


கண்ணிமைகள் என் நினைவில் திளைக்க மகிழ்
காதலிசை விழிவழியே ஒழுகுதடி!
தென்னமுதில் திளைத்திட்ட தேன்பாகாய்
தெவிட்டாத இசையுந்தன் மொழிகளடி!

மின்னுமிரு கண்ணொளியில் சிறை கண்டு
மீண்ட எனை கவி மொழியால் தழுவிடடி!
இன்னுமொரு நுதல் கண்ட திலகமதில்
என்னுயிரை கண்டுமனம் மகிழுதடி!

பொன்னுதிர்த்த கன்னமதில் என்மனதை
பொருத்தி வைத்து பார்ப்பதுயென் ஆசையடி!
விண்மறைத்த நிலவொளியை கண்பொதித்து
விரும்புகிறேன் என என்னுள் பாய்ச்சிடடி!

No comments:

Post a Comment