Wednesday 30 September 2015

வாழ்த்து மடல்


வான்புகழும் வெற்றி பெற்ற
வீரத் திருமகன் வெற்றிசெல்வனின்
தூய மணி மார்பில்

வானுரையும் தேவர்களை
விஞ்சிய செவ்விளங்குமரி
கண்களிலே காதலுடன்,

கைகளிலே மாலையுடன்
விண்ணவரும், மன்னவரும்
போற்றிப் புகழுரைக்க
பொன்புலரும் காலையில்
வந்தனள்,
மாலையிட்டனள்,
நாணம் கொண்டனள்,
தேகம் பூத்தனள்.

வெற்றிசெல்வன் விரலும்,
வைஜயந்தி விரலும்
இணைந்த அத்தருணமே
இப்பூவுலகின் பொன்னேட்டில்
பதிந்ததன்றோ!

இப்படியோர் தம்பதியை
இவ்வுலகம் கண்டதில்லை.
உருவமே மாறி நிற்க
உணர்வுகளில் ஒன்றாகி
உனக்குள்ளே நான்,
எனக்குள்ளே நீயென்ற
உயர் நிலை அடைந்தவராய்
உத்தமராய் உள்ளவரை
என்றென்றும் வாழ
வாழ்த்துகிறேனிந்த
வாழ்த்து மடல் வழியே!

No comments:

Post a Comment