மாலை மயங்கும் வேளை
மந்திரமாய் மனதை
அசைக்கும் மழைக் காற்று
வந்தனள் என்னவள்
மல்லிகைப்பூவும்
மகிழ்ப்பூவும் சூடி
மெல்லியலாள்
அன்னம்போல் அசைந்து
அருகில் நின்றாள்
கண்டவுடன் கவிஞனுக்கு
காதல் கவியாக ஊற்றெடுக்க
கைகளால்
பரபரவென வரைந்து
கண்ணவளின்
கையில் கொடுத்தேன்
படித்தவள்
கண்கள் பனிக்க
உள்ளம் துடிக்க
உடனே
மீண்டுமென் இசைக் குயிலாய்
பிறப்பெடுத்தாள்.
பாடலாய் பாடி
என்னுளம் துளைத்தாள்.
ஆனந்தத்திலென் மனம்
அந்தரத்தில் சுழன்றது.
அருகில் வந்து கேட்டாள்.
என் பாடல் எப்படி
எவ்வளவு பிடித்தது
ஊரளவு, உலகளவு,
நீரளவு, நிலவளவு,
எவ்வளவென்று சொல்லுவேன்?
என் காதலுன்மீது
எவ்வளவோ
அவ்வளவு...!
No comments:
Post a Comment