Wednesday 23 September 2015

அவள்
























என் கற்பனையெல்லையை
அவள் கருங்கூந்தலால் கடந்திருந்தாள்

என் வானத்தின் வண்ணங்களை
அவள் விழிக்கவிதையால் சமன் செய்திருந்தாள்

என்னிசை மேடையை
அவள் குரல் போதையால் குளிரச் செய்திருந்தாள்

என்னுலாத் தென்றலை
அவள் முந்தானை சிறகுக்குள் முடிந்திருந்தாள்

என் தோட்டப் பூக்களை
அவள் உடலெங்குமே சூடியிருந்தாள்

என் கோபச் சூழலை
அவள் விரல் தொடுகையில் களைந்திருந்தாள்

என் பனிச் சாரலில்
அவள் உடல் கொண்டெனை மூடியிருந்தாள்

என்னிதயமெங்கிலும்
அவள் ஒருத்தி மட்டுமே யெனச் செதுக்கியிருந்தாள்

No comments:

Post a Comment