என்
கற்பனையெல்லையை
அவள்
கருங்கூந்தலால் கடந்திருந்தாள்
என் வானத்தின்
வண்ணங்களை
அவள்
விழிக்கவிதையால் சமன் செய்திருந்தாள்
என்னிசை மேடையை
அவள் குரல்
போதையால் குளிரச் செய்திருந்தாள்
என்னுலாத்
தென்றலை
அவள் முந்தானை
சிறகுக்குள் முடிந்திருந்தாள்
என் தோட்டப்
பூக்களை
அவள் உடலெங்குமே
சூடியிருந்தாள்
என் கோபச் சூழலை
அவள் விரல்
தொடுகையில் களைந்திருந்தாள்
என் பனிச் சாரலில்
அவள் உடல்
கொண்டெனை மூடியிருந்தாள்
என்னிதயமெங்கிலும்
அவள் ஒருத்தி
மட்டுமே யெனச் செதுக்கியிருந்தாள்
No comments:
Post a Comment