அந்தக் கரிய
இருள் சற்றுத் தொலைவிலிருந்ததை
அடுத்துச்
செல்லும்வரை அறியமுடியவில்லை
சில்வண்டுகளின்
ரீங்காரத்தை மிஞ்சிய
அகத்தினிரைச்சல்
அதிகமாயிருந்தது
பொன்மாலைக்கப்பால்
இருளென்ற
நிதர்சனம்
புத்தியை அடையவில்லை
நிசப்தக்
காற்றெனை சூழ்ந்திருந்தும்
உணர்வுகளைத்
தொடவில்லை
மடல்களைத்தழுவிய
பனிக்காற்றின்கானம்
செவிப்பறைக்குள்
இசையாகவில்லை
தனிமையின்
தாகத்திற்கு நீரூற்றிய
நினைவுக்கோப்பை
நிரம்பி
வழிந்துகொண்டிருக்கிறது
எனக்குள்மூழ்கி
என்னைமீட்டெடுக்கும்
துடிப்பிலிருக்கும் நீ
அனல்வீச்சில்
தடம்பிறழ்ந்த
இருள்போர்வையுதறி
விரைந்து வா
உன்னால்
மட்டுமேயெனை
முழுமையாக
மீட்டெடுக்க இயலும்…!
No comments:
Post a Comment