Wednesday 23 September 2015

மீட்டெடு


அந்தக் கரிய இருள் சற்றுத் தொலைவிலிருந்ததை
அடுத்துச் செல்லும்வரை அறியமுடியவில்லை

சில்வண்டுகளின் ரீங்காரத்தை மிஞ்சிய
அகத்தினிரைச்சல் அதிகமாயிருந்தது

பொன்மாலைக்கப்பால் இருளென்ற
நிதர்சனம் புத்தியை அடையவில்லை

நிசப்தக் காற்றெனை சூழ்ந்திருந்தும்
உணர்வுகளைத் தொடவில்லை
மடல்களைத்தழுவிய பனிக்காற்றின்கானம்
செவிப்பறைக்குள் இசையாகவில்லை

தனிமையின் தாகத்திற்கு நீரூற்றிய
நினைவுக்கோப்பை
நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது

எனக்குள்மூழ்கி
என்னைமீட்டெடுக்கும் துடிப்பிலிருக்கும் நீ
அனல்வீச்சில்
தடம்பிறழ்ந்த இருள்போர்வையுதறி
விரைந்து வா

உன்னால் மட்டுமேயெனை
முழுமையாக மீட்டெடுக்க இயலும்…!

No comments:

Post a Comment