Monday 21 September 2015

மாமனிதர் அப்துல் கலாம் ஐயாவிற்கு அஞ்சலி


அழுத விழிகளினி ஆற்றல் கொள்ளட்டும்
சுடர்விடும் நம்பிக்கை வான் தாரகையாகட்டும்
இதயச் சுவற்றில் புதுச் சூளுறை எழுதட்டும்
இந்திய தேசம் பெரும் வல்லரசாகட்டும்

கனவு மெய்ப்படும் நம் காலம் வாய்க்கிறது
வானின் கோளெங்கும் பாரத மென்கிறது
ஏழ்மைச் சிறைகள் சிதறி துகளாய் உதிர்கிறது
எளிமை கொண்ட வுயிர் எம்முடன் வாழ்கிறது

இளையச் சமுதாயம் உமது ஒளியேந்தி
தரணியெங்கும் மிளிர்கிறது
உலகப் பெருமகனார் கண்ட கனவுகளாய்
மலரும் பூக்களிங்கே நிஜங் கொண்டே எழுகிறது

நீங்கா துயில் கொள்ளுமுன்
நினைவுப் பதியங்கள்
மனிதமனைத்திலும் உயிர்க்கிறது

No comments:

Post a Comment