அழுத விழிகளினி ஆற்றல் கொள்ளட்டும்
சுடர்விடும் நம்பிக்கை வான் தாரகையாகட்டும்
இதயச் சுவற்றில் புதுச் சூளுறை எழுதட்டும்
இந்திய தேசம் பெரும் வல்லரசாகட்டும்
கனவு மெய்ப்படும் நம் காலம் வாய்க்கிறது
வானின் கோளெங்கும் பாரத மென்கிறது
ஏழ்மைச் சிறைகள் சிதறி துகளாய் உதிர்கிறது
எளிமை கொண்ட வுயிர் எம்முடன் வாழ்கிறது
இளையச் சமுதாயம் உமது ஒளியேந்தி
தரணியெங்கும் மிளிர்கிறது
உலகப் பெருமகனார் கண்ட கனவுகளாய்
மலரும் பூக்களிங்கே நிஜங் கொண்டே எழுகிறது
நீங்கா துயில் கொள்ளுமுன்
நினைவுப் பதியங்கள்
மனிதமனைத்திலும் உயிர்க்கிறது
No comments:
Post a Comment