காற்றலைந்த
கட்டாந்தரை மேட்டில்
வீற்றிருந்த
ஒற்றை மரத்தின் வேர்கள்
ஆழப் புதைந்து
அகல விரிந்து
மண்ணின் சின்னச்
சின்ன விரிசல்களை
இழுத்துப்
பிடித்திருந்தன
என்றோ விதையூன்ற
காரணமாயிருந்த
கருங்குருவியின்
சேயொன்று
தனதுரிமை
எனக்கருதி
சிறு கூடொன்றை
பணிந்திருந்தது
மரத்தின்
பழங்களின்மேல்
மையலில்லாத
மாரீசன்
குருவியையும்
கூட்டையும் குறி வைத்து
அடிமரத்தை
மாய்ந்து மாய்ந்து
வெட்டிக்கொண்டிருந்தான்
உடல்களைத்து
உதிரம் சுண்டிப்போக
என்றோ
வாங்கிவைத்து
எடுக்காமல்
விட்டிருந்த
நஞ்சொன்றின்
நினைவு வர
ஓடிச்சென்று
எடுத்து வந்து
ஒவ்வொரு வேரிலும்
விட்டு வைத்தான்
வீழ்ந்தது மரமும், குருவியும்
கூடும் மட்டுமல்ல
வேரிழந்த
வெடிப்புகள் பெரிதாகி
கட்டாந்தரையே
காணாமல் போய்விட்டது
No comments:
Post a Comment