Saturday 12 September 2015

பழகிக்கொண்டேன்

















வலிகளையும் வரவேற்கப் பழகிக்கொண்டேன்
விழி துடைக்க உன் விரல் வரமானதால்

அனல் பூச்சை அப்படியே
ஏற்றுக்கொண்டேன்
என் அகமெங்கும்
உன் அன்பருவி பெருகியதால்

ரணங்களையும் ருசித்து ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
ரசிகை நீயென் வசமானதால்

ஊடுகுளிர் எலும்புருக்க
சிலிர்த்து நின்றேன்
நின் தணல் மேகத் தழுவலினால்

தகித்திருக்கும் நாடிநரம்பெல்லாம்
குளிருடுத்தக் கண்டேன்
உன் மோகமழை என்னில் பொழிந்ததினால்

நெடுந்தோல்வி
வடமிறுக உதறிக் கொண்டேன்
மென் தளிர் விரலென்னை
ஸ்பரிசித்து உயிர்ப்பித்ததனால்

தொடரிடர்
நிகழ் கனக்க
பேரிடர் பாதம் இடர
வாகாயுன் தோள் தொட்டணைத்து நின்றேன்
என் வழியெங்கும்
உன் விழிஜால மொழி சொன்னதினால்...

No comments:

Post a Comment