நடுக்கூடத்தில் நாக்கூசாத வார்த்தைகளால்
அர்ச்சிக்கும் தந்தையையும்
தனை காக்க
தற்காப்பு வார்த்தையரண் அமைக்கும் தாயையும்
விதிர்த்துப் போய் பார்த்து
விழிநீர் கசியும் தமக்கையையும்
என்றும் நடக்கும்
இயல்பான செயலென்று
எடுத்தெறிந்து போகவியலாமலும்
ஏதும் செய்யவியலாமலும்
தவிப்பினை தனக்குள் வைத்து தைத்து
முன் தினம் பேச்சுப்போட்டியில்
முதன்மை பெற்றதை சொல்லாமல்
மொழியுதிர்க்கா மௌனக்கலை கற்க
புத்தகத்தினுள் வழியுள்ளதாவெனத் தேடி
தன்னை புதைத்துக்கொள்கிறாளவள்
மெளனம் "கலையா".கலையா? மோனத் தவமா?
ReplyDelete