Thursday 25 June 2015

பாலைவன மணற்துகள்
















பரந்து கிடந்த பாலைவனப் பரப்பில்
சுடுமணற்துகளை ஒவ்வொன்றாயெடுத்து
பத்திரப் படுத்திக்கொண்டிருந்தேன்

பொறுமையிழந்து இருகைகொண்டு
வாரியெடுக்க முனைகையில்
விரலிடுக்குகளில் வழிந்தவையே யெந்தன் கவனமீர்க்க
எஞ்சியவை சட்டென அடித்தப் பெருங்காற்றில்
சிதறிப் போயின

ஓரிரண்டுத் துகள்கள்
விழி நுழைந்த உறுத்தலில்
துளிர்த்தத் துளிகள்
பாலையை நனைக்கக்கூடுமோவென அஞ்சினேன்

ஆங்கு அவள் தொலைவில்
நடந்து வருகையில்
கானலெனத் தோன்றி
அடுத்து வர உதவுமோவெனவும்
ஏங்கினேன்

விடையறியா கேள்விக்குள் நான் வீழ்ந்திருக்க
வினாக்களை மட்டுமே சுமந்த அவள்
வருவாளா

விடை பகர்வாளா?

No comments:

Post a Comment