பரந்து
கிடந்த பாலைவனப் பரப்பில்
சுடுமணற்துகளை
ஒவ்வொன்றாயெடுத்து
பத்திரப்
படுத்திக்கொண்டிருந்தேன்
பொறுமையிழந்து
இருகைகொண்டு
வாரியெடுக்க
முனைகையில்
விரலிடுக்குகளில்
வழிந்தவையே யெந்தன் கவனமீர்க்க
எஞ்சியவை
சட்டென அடித்தப் பெருங்காற்றில்
சிதறிப்
போயின
ஓரிரண்டுத்
துகள்கள்
விழி
நுழைந்த உறுத்தலில்
துளிர்த்தத்
துளிகள்
பாலையை நனைக்கக்கூடுமோவென
அஞ்சினேன்
ஆங்கு அவள்
தொலைவில்
நடந்து
வருகையில்
கானலெனத்
தோன்றி
அடுத்து வர
உதவுமோவெனவும்
ஏங்கினேன்
விடையறியா
கேள்விக்குள் நான் வீழ்ந்திருக்க
வினாக்களை
மட்டுமே சுமந்த அவள்
வருவாளா
விடை
பகர்வாளா?
No comments:
Post a Comment