உன்னில் உதித்தவனென்
உணர்வைப் படித்தவன் நீ
என்றும் நானுமது உம் மகவாய் உடனிருக்க
நான் நானாகவே சிறக்க
துணை நிற்கும் முதல் தோழன் நீ
அரிச்சுவடி அறியுமுன் அறிவறிவித்த முதற்கண் ஆசான் நீ
தாயகன்ற பொழுதுகளிலன்றி
தனிமையுணரும் நொடிகளுக்குள்
தவமாயிருந்திட்ட
எந்தாயுமானவன் நீ
எந்தையே இன்னுயிர் தந்த நீயே
எனக்கு எல்லாமுமாய் நெடிதுயர்ந்து நின்றாயே...
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment