கருத்தாய்வு
அன்பான சகோதரத் தோழமை பூண்ட இவர் எனக்கு அறிமுகமாகி மிகக் குறைந்த காலம்தான் இருக்கும். அதிகம் பேசாமல் அவரது ஆற்றல் மிகு சிந்தனையையும் எழில்மிகு வரிகளையும் மட்டுமே பேச வைப்பார்.
தொடக்கத்தில் சிறு சிறு கவிதைகளாய் எழுதிக்கொண்டிருந்த இவர் எனக்கு ஒரு சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர் என புலப்பட்டது எனது பக்கத்தில் நானொரு படம் கொடுத்து அன்புத் தோழமைகளை கவிதை எழுதும்படி கேட்டபோதுதான்
அநாயாசமாக அத்தனை கவிதைகளை அதுவும் மாறுபட்ட வெவ்வேறு கோணங்களில் ஒரு படத்திற்கே எழுதி நட்புக்கள் அனைவரையும் அசத்திவிட்டார். அதன்பின்னர் நானும் அன்னாரது பக்கங்களில் அவரது பதிவுகளை தொடர்ந்து கவனிக்கலானேன்
மிக எளிமையான சொற்களால் ஆழ்மனதிலுறையும் அத்தனை வேதனை வலிகளையும் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர்.
அன்று
த(க)ண்ணீரில்
தத்தளித்த எறும்பாகிய எனைக் காப்பாற்றிய
ஒற்றையிலையான
உனதன்பு
இன்று
வெயில் பட்டால்
சுருண்டிடும்
எலும்பில்லா
புழுக்கள் போல்
உன் நிராகரிப்பில்
த(க)ண்ணீரில்
தத்தளித்த எறும்பாகிய எனைக் காப்பாற்றிய
ஒற்றையிலையான
உனதன்பு
இன்று
வெயில் பட்டால்
சுருண்டிடும்
எலும்பில்லா
புழுக்கள் போல்
உன் நிராகரிப்பில்
என்னும் கவிதையில் நிராகரிப்பில் சுருண்டுபோகும் உள்ளத்தை புழுவினோடு ஒப்பிட்டது மிகச் சிறப்பு.
காதல் கொண்டு
உறவு கொண்டனர்...
உறவு கொண்டதும்
காதலைக்
கொன்றனர்...
உறவு கொண்டனர்...
உறவு கொண்டதும்
காதலைக்
கொன்றனர்...
எனும் கவிதையில் மிகக் குறுகிய வரிகளில் இன்றைய அவலக் காதலின் நிலையை அழகாகச் சாடியுள்ளார்
முகநூலும்
இற்றாகிவிட்டதோ
இற்றாகிவிட்டதோ
எனத் தொடங்கும் கவிதையில் முக நூலின் பல பதிவுகளின் தரம் தாழ்ந்து போயிருப்பதை வேதனையுடன் மொழிந்திருக்கிறார்.
இவ்வண்ணம் பலப்பல படைப்புகளை பலப்பல எண்ணச் சிதறல்களை உள்ளடக்கி படைத்து நமக்கு விருந்து படைக்கிறார்.
இவரது படைப்புத்திறன் மென்மேலும் வளர நாம் வாழ்த்துவோம் வாருங்கள்.
No comments:
Post a Comment