Saturday 20 June 2015

காதல் கொள்ளும்

மின்மினிப் பூச்சியென மிதந்து வந்தனளென்
மென்மன முழுமையுமாய் பரவி நிறைந்தனள்
பன்மொழிப் பாவலரும் எழுதாக் காவியமா மிப்
புவன மெங்கிலுமே வரையா ஓவியமே

அன்ன நடை தளர ஆடும் மலரமுதம்
அலங்கு மதன் மேலே இலங்கும் விழி சுழலும்
பின்னல் முன்வருங்கால் மேடை கண்டதென
பாதம் பாவு மொரு நடனப் பேரழகும்

செந்நிறக் கோவையிதழ் சிந்தும் புன்னகையும்
செங்கண் வரி மலர பொங்கும் ஒளிமழையும்
கன்னக் கதுப்பினிலே திளங்கும் கனியழகும்
காதல் கொள்ளுமெனை கொல்லும் அனுதினமும்

No comments:

Post a Comment