Thursday 25 June 2015

சூ.சிவராமன்




கருத்தாய்வு

சூ.சிவராமன்

இனிய நண்பர் சூ.சிவராமன் எனக்கு ஒரு வருட காலமாக நட்பில் உள்ளார். மிக அற்புதமான எழுத்தாளர். உயர்ந்த சிந்தனையும் அரிய கருத்துக்களும் இனிய சொல்லாடலும் கலந்து இருக்கும் இவரது படைப்புகளில்.
பலப்பல நண்பர்களுடைய அருமையான கவிதைகளை தனது பக்கங்களில் பதிவிட்டுப் பாராட்டி மகிழ்வார்.
இவர் ஒரு சிறைந்த வாசிப்பாளர். படித்த புத்தகங்களை பற்றி அடிக்கடி முக நூலில் சொல்வார். நமக்கும் படிக்க மிகவும் ஆவலாக இருக்கும்.
இவரது எழுத்தில் சமூக அக்கறை மிக அதிகமாக்க் காணப்படும்

நினைவாயிருக்கிறாய்...

என் கண்ணீர்த் துடைத்த
முந்தாணையிலொன்று
பிடித்துணியாகி கிடக்கிறது


என்னும் கவிதையில் தன்னலமற்ற தாயன்பின் பெருமையை எத்தனை எளிதாக அதேவேளையில் உண்ர்வுகளில் ஆழப்பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறார்.

என்னவாக இருக்கும்...
அப்படியொன்றும்
உருகி உருகி காதலித்து விடவில்லை
பீச்சோ பார்க்கோ
காமத்தில் கட்டி உருளவுமில்லை


என்னும் இக்கவிதையை எல்லோரும் படித்துப் பாருங்கள். இவரது கேள்வி சாட்டையடிபோல் மனதை தைக்கும். என்னால் இன்றுவரை பதில் சொல்ல இயலவில்லை.

சில்லுக் கோடு விளையாடுகிறாள்
சித்ரா

சின்னச் சின்னக் கட்டங்களில்
நொண்டியடித்து தாவுகிறாள்


என்னும் கவிதையில் எவ்வளவு அழகாக எதார்த்த வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறார்.

உன்னதமான எழுத்தாளர். தமிழை மிகத் தூய்மையாக அழகு மிளிர எழுதுகிறார். இவரது படைப்புகள் உலகளாவி புகழ்பெறவேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment