Thursday 11 June 2015

அவளே நிலையாய்



ஓராயிரம் நினைவுருக்கள்
ஒன்றின் எழுச்சியை மற்றது தாக்கி
உணர்வுகள் பெருக்கெடுத்து சிதற
நிலத்தடியில் குமுறும் கனலை
கட்டை விரலில் அடக்க நினைக்கும் கற்பனாவாதியாய்
இமையிறுக்கி அகம் நிறுத்த முனைகையில்
மனம் தொட்ட அவள் வாசங்கொண்டு
சட்டெனப் பெருகிய மழையில்
அத்தனை உணர்வுகளும் அமிழ்ந்து
அவள் மட்டுமே நின்றாள்

No comments:

Post a Comment