ஓராயிரம் நினைவுருக்கள்
ஒன்றின் எழுச்சியை மற்றது தாக்கி
உணர்வுகள் பெருக்கெடுத்து சிதற
நிலத்தடியில் குமுறும் கனலை
கட்டை விரலில் அடக்க நினைக்கும் கற்பனாவாதியாய்
இமையிறுக்கி அகம் நிறுத்த முனைகையில்
மனம் தொட்ட அவள் வாசங்கொண்டு
சட்டெனப் பெருகிய மழையில்
அத்தனை உணர்வுகளும் அமிழ்ந்து
அவள் மட்டுமே நின்றாள்
No comments:
Post a Comment