Friday 12 June 2015

காத்திருப்பு






















வரைகோலெடுத்து
வண்ணங்களில் தோய்த்து
எழுத முயன்ற ஓவியம்
முழுமை பெறாமலும்

விழிகளை கொண்டே
படைக்கப்பட்ட பாடல்கள்
கண நேரப் பார்வை தேடி
காத்திருக்கவும்

மகிழ்ச்சி பொங்கும்
மன்மத நடனங்கள்
விலகி நிற்கும் விரல்களால்
வேதனை பூச்சூடி
வாட்டங்கொள்ளச் செய்தபின்னும்

ஒற்றைப் புன்னகையில் பூத்திருந்த உயிரை
வெட்டிச் சாய்ப்பதற்கா
கானகம் சென்றாய்

தவிப்பின் வாசனை
நுகராதிருக்கும் பொருட்டு
தூரங்கள் அதிகரித்து
துயரங்கள் தின்றாய்

இடைபட்டக் கடலை
எடுத்தென் கவிதை கமண்டலத்தில் நிறைத்து
அடுத்துன் அருகில்
அள்ளியணைக்க வருகிறேன்
காத்திரு கண்ணே...!

No comments:

Post a Comment