Saturday 20 June 2015

கைக்கிளை காதல்

















முன்பிருந்த பூந்தோட்டத்தில்
பூத்துக் குலுங்கியிருந்த மலர் கூட்டத்தில்
அதனோடு இனிமை பேசியிருந்த
செம்பருத்திப் பூவினிதழ் சற்றே வாடியிருந்தது

முன்வாசலை அடுத்து
பரந்திருந்த சாளரத்தை மூட வைக்கப்பட்டிருந்த
கண்ணாடி தடுப்பிற்கு
அம்மலருடன் எத்தனை கதை பேசினாலும்
தீராததாகவே தோன்றியிருந்தது

சட்டென்று துளிர்த்த
சில மழைத்துளிகள்
தன் மீது விழுந்து
நழுவி
கீழே விழ

காதல் மலர்மீது வீழ்ந்த துளிகளோ
இதழ்களில் தங்கி இன்புற்றிருக்க
செம்பருத்தியும் சிலிர்த்து தலையாட்டி
புத்துணர்வு கொண்டதாய்
புன்னகை பூக்க
தன்மேல் அசூயைகாற்று படர்வதாய் உணர்ந்தது

பின் தொடர்ந்து
படபடவெனக் கொட்டியப் பெருமழையில்
வழிந்த துளிகளை விலக்கிய கண்ணாடி
அன்பு மலரை விழித்து நோக்க
செம்பருத்தியோ
சிதறிய இதழ்களை தரையில் பரப்பி

பொழிந்த மழையும்
புன்னகை மலரும்
இறைவன் வரமெனச் சொல்லி
மீண்டும் பிறப்பினும்
கைக்கிளை காதல்
கனவேயென அறிவுருத்தி
வேதனை மொழிந்தது

No comments:

Post a Comment