கருத்தாய்வு
புதுமை தமிழினி
எனது அன்புத் தங்கை.
இரு வருடங்களாக எனக்குப் பழக்கம். முக நூலில் முதன்முதலில் சகோ கவி முகிலன்
பக்கத்தில் எனக்கு அறிமுகமானார். அப்போதே எழுத்தார்வம் இவருள் சுனையூற்றாய்
இருப்பது கண்கூடாகத் தெரிந்தது.
தமிழ் ஃபாண்ட் இல்லாத
நிலையிலும் சின்னச் சின்னக் கவிதைகளை ஆங்கில எழுத்துக்களை கொண்டே எழுதிவந்தார்.
ஒரு முறை கேட்டபோது விரைவில் புது மொபைல் வாங்கி தமிழில் எழுதுவேன் அண்ணா என்று
சொன்னார்.
அவ்வாறு தமிழில்
எழுத்த் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை இவரது எழுத்தும் அதன் கருத்துக்களும்
ஒவ்வொரு நாளும் பலரும் அதிசயிக்கத் தக்க வண்ணம் வளர்ந்துகொண்டே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் இவரது
கவிதைகள் புதுப்புது கருத்துக்களுடன் மிளிரும். சமூக எண்ணங்கள் அநாயாசமாக இவரது
கவிதைகளில் நமது சிந்தனையை அசைத்துப் போடும்.
காதல் கவிதை மட்டுமே
பெண்கள் எழுதுவார்களோ என பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இவர் தனது
எழுத்துக்கள் மூலமாக ஒரு சமுதாய மாற்றத்தை விளைவிக்க முடியுமெனும் நம்பிக்கையுடன்
எழுதுபவர் போன்று எனக்குத் தோன்றுகிறார்,
அலங்கார பொம்மையாய்
பட்டுக்குள் புதைந்த படி
என்னும் கவிதையில் வரதட்சிணை வாங்க வந்திருக்கும் மாப்பிள்ளைக் கூட்ட்த்தை
அடித்து விரட்டாத குறைதான். ஆஹா அதன் பாங்கே தனி.
வடை சுட்ட கதை சொல்லும் பாட்டி,,
வாலாட்ட காது திருகும் தாத்தா,,
என்னும் கவிதையில் இவர் குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தையின் அவலத்தை
சொல்வதை வாசிக்கும் எவரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது
சற்றுமுன்
முன்நெற்றி
வருடிப் போன
என்னும் கவிதையில் கல்லூரி நட்பை நினைவு கூறும் விதம் மிக அழகு
இவ்வாறு பல்வேறு கோணங்களில் எல்லா தளங்களிலும் பயணிக்கும் இவர் விரைவில் தனது
கவிதை தொகுப்பை வெளியிடப் போவதாக சொல்லி இருக்கிறார். அதனை ஆவலுடன்
எதிர்பார்க்கும் அன்பு அண்ணன் என் ஆசி இவருக்கு என்றும் உண்டு.
நீங்களும் வாழ்த்துங்களேன்..!
No comments:
Post a Comment