Sunday 21 June 2015

மந்தகாச பார்வை

மந்தகாச பார்வை கொண்ட மனோரஞ்சிதம்
மைய லவள் கூந்தல் மின்னும் மலர் கோபுரம்
அந்திவானம் போலிரெண்டு அதர கோவையும்
அமிழ்து கொண்டு பருக தூண்டும் வேளை மந்திரம்.
நங்கை நாசி நறுமண முல் லைப்பூவின் மணம் கொண்டிட
நாயகனும் இறுகணைத்து சுவாசம் பெற்றிட
மங்கல நாண் பூண்ட மங்கை மார்பில் சாய்ந்திட
மன்னவன் தன் விண்ணுலகம் கண்ணில் காணுவான்

No comments:

Post a Comment