அன்புச் சகோதரன் ராம் எனக்கு அறிமுகமானது ஒரு பொது நலத்தொண்டினுக்காக. இரத்த தான முகாம்கள் நடத்துவதிலும தவிப்புடன் இருக்கும் யாருக்கும் உதவுவதற்கும் தயங்காத உள்ளம் படைத்தத் தம்பியவன்
ஆசிரியப் பணி புரியும் ராம், தமிழ் சிறப்புப் பாடமாக கல்லூரியில் பயின்றிருக்கிறார். அவருடைய வளமையான தமிழ் அவரது கவிதைகளில் தெள்ளெனப் புலப்படும்.
சிலேடை மொழிதலில் தன்னிகரற்றவர்
பெண்மைக்கும் தாய்மைக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவர். அதே நேரம் அநீதியைக் கண்டால் பொங்கியெழவும் தயங்க மாட்டார்
அண்மையில் அவர் எழுதிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனைவிகளின் நிலை குறித்த கவிதை என்னை உலுக்கிவிட்டது
வர்ணநிற மில்லா
அரிதார மணியா
கலவை கரையா
துளிச் சாயமூறா
எனத் தொடங்கும் கவிதையிலும்
புளிச்சாற்றினை நீக்கி
பெருங்காயம் தகர்த்து
வெங்காயம் தாங்கிட
என்னும் கவிதையிலும் அவரது சிலேடை மொழியின் திறனை கண்டறியலாம்
அரிதார மணியா
கலவை கரையா
துளிச் சாயமூறா
எனத் தொடங்கும் கவிதையிலும்
புளிச்சாற்றினை நீக்கி
பெருங்காயம் தகர்த்து
வெங்காயம் தாங்கிட
என்னும் கவிதையிலும் அவரது சிலேடை மொழியின் திறனை கண்டறியலாம்
அன்றொரு நன்னாள்,
ஆங்காங்கே பிணக்குவியல்
இனப்படுகொலை ஈழவ
ஈனசாதியின் காயும்
எனத் தொடங்கும் கவிதையில் தமிழன் தனிமை படுத்தப் படுவதை சாடியிருக்கிறார்
ஆங்காங்கே பிணக்குவியல்
இனப்படுகொலை ஈழவ
ஈனசாதியின் காயும்
எனத் தொடங்கும் கவிதையில் தமிழன் தனிமை படுத்தப் படுவதை சாடியிருக்கிறார்
#கற்பியல்.
உள்ளத் தூய்மையுடையான் ஓதிய
நூலாதலால் இல்லறம் பூண்டான்கண் கற்பிதம்-
தெள்ளியஆண்மகன் கையில் உரைபவள் அத்யாயம் நாணுடையாள் பெற்ற நலம்..
இக்கவிதையில் கற்புக்கு இலக்கணம் வகுக்கின்றார்
உள்ளத் தூய்மையுடையான் ஓதிய
நூலாதலால் இல்லறம் பூண்டான்கண் கற்பிதம்-
தெள்ளியஆண்மகன் கையில் உரைபவள் அத்யாயம் நாணுடையாள் பெற்ற நலம்..
இக்கவிதையில் கற்புக்கு இலக்கணம் வகுக்கின்றார்
என்ன தவம்
செய்தேன் யசோதா.,
எனத் தொடங்கும் கவிதையில் கொஞ்சி விளையாடுகிறார்
செய்தேன் யசோதா.,
எனத் தொடங்கும் கவிதையில் கொஞ்சி விளையாடுகிறார்
இன்னும் பலப்பல கவிதைகளை புனைந்து நமக்கு சொல்லவொணா மகிழ்ச்சியை தருவித்துக்கொண்டிருக்கிறார்
உயர்ந்த பண்புகள் நிறைந்த அவர் மென்மேலும் புகழ்மாலைச் சூடி உடலும் உள்ளமும் நலமுடன் கூடி பெறுவாழ்வு வாழவும், அவரிடம் பயிலும் சிறார்களும் மிகச் சிறந்த நிலையடைய உதவி செய்தவாறும் தம்பி ராம் இன்னும் தமிழில் பலப்பல சாதனைகள் புரிய வேண்டி வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment