Thursday 11 June 2015

எஞ்சியவை ஏது




கார்முகில் தொட்ட
பூமல ரெந்தன்
காதினில் வந்துன்
காதலைச் சொல்லும்.


ஆற்றினில் மெல்ல
ஆடிடு மோரிலை
ஆசையாய் வந்துன்
அழகினை சொல்லும்.

தேவதை சூடிய
செந்நிற மேகலை
உன்னிடை ஆடி
உவமைகள் சொல்லும்.

சூழலில் சிக்கிய
சிறு துரும்பாடியே
சீறுமுன் கோப
செவ்வரி சொல்லும்.

பாரடி நீ தமிழ்
பாவினைப் பாடிட
தேங்குரல் தீந்தமிழ்
வாசனை சொல்லும்.

பார்ப்பவை யாவும்
பலவிதமாக
உன்னையே எனக்
குணர்த்துவதாக.

என் நிலைக் கூற
எஞ்சியவை யென
ஏதுமில்லையடி
உன்மனம் ஒன்றே!


No comments:

Post a Comment