Thursday 25 June 2015

தவிப்பு
























அத்தனை அலைச்சலின் முடிவில்
அன்றலர்ந்த செந்தாமரை முகத்தாளின் வாட்டம்
வாகனத்தை முடுக்கவா
சாலையோரம் நிறுத்தவாவென சிந்திக்க வைத்தது

சட்டென தேகமெங்கும் பரவிய வெப்பம்
அடுத்துள்ள மருத்துவரை
சடுதியில் அடையச் சொன்னது

அவளோ
நானடுத்து இருப்பதனால்
தான் நடுங்கப் போவதில்லையெனச் சொல்லி
வீட்டிற்கே வாகனத்தை
விரட்டுங்களென்றாள்

அந்நேரம் சொல்பேச்சுக்கேளாமையே
அவசரத் தேவையெனவுணர்ந்து
மருத்துவமனை கொண்டு நிறுத்தினேன்

அவளை விட தவிப்பது
நானென வுணர்ந்த செவிலியர்
ஆங்கோர் இருக்கையை காட்டி
அமைதியா யிருவெனச் சொல்லி அகன்றனர்

இருக்கவியலா இருக்கையில்
பொறுக்கவியலா படபடப்பில்
கையிலிருந்த நீரை
கபளீகரம் செய்திருந்தேன்

கடந்துபோன சில நிமிடத்துளிகளில்
கற்பனை சங்கை ஊதாமல்
காட்சித்திரைகளை விரிக்காமலிருக்க
ப்ரம்ம ப்ரயத்தனம் தேவைபட்டது

இடுப்பிலிட்ட ஊசியின்
வலியையும் பொருட்படுத்தாது
என் தவிப்பையுணர்ந்து வேகம் வந்தவள்
அடுத்திருந்த இருக்கையிலமர்ந்து
மென் கரம் கொண்டு என் கரம் பற்றி

எனதன்பின் கவசமிருக்க
எந்நாளும் தனக்கொன்றும் நேராதென்று
விரலசைத்து உயிர்வழி

வார்த்தைகளை உணர்த்திக் கொண்டிருந்தாள்

No comments:

Post a Comment