Thursday 11 June 2015

பறக்கும் பஞ்சுப் பொதி




அடர்ந்த கார்கூந்தலின் நுனிச் சுருட்டலில்
எண்ண சுழிவுகளை பதித்து வைத்தேன்
சிவந்த இடைதொட்டு
சிதறாத முத்தமிட்டு
செஞ்சாந்து வரம்பெறுமோ என்றிருந்தேன்.
ஒற்றைக்கால் பதித்து
உந்தித் திரும்பிய வேளைதனில்
சுழன்றடிக்கும் விசிறியாய்
சிதறிவிட்ட என் எண்ணத் துகள்களை
கோர்த்தெடுத்து மாலையாக்கி
சூடிக் கொடுக்க காத்திருந்தேன்,
கனவு கலைய
கைவிரல்களை விட்டு
பறந்து கொண்டிருந்தன
தலையணையின் பஞ்சுப் பொதி..!

No comments:

Post a Comment