உருகிய அந்தகார இருட்டின்
ஓரொரு துளியும்
வழிந்தச் சுவட்டில்
வலம் வரவா எந்தன் சிறகிழந்த கனவுகள்
துளையிட்ட பாறையில்
வெடிவைத்த பின்னர்
தகர்ந்தெழும் துகள்களினாலான
பூத்தூவலா எந்தன் வானம்
ஆதி யிரைச்சலும்
அண்டம் புரண்ட
பேரோசையின் கூச்சலும்
ஒன்றிணைந்து இசைத்ததா எந்தன் கானம்
அனலும் மணலும்
அருகிப் பெருகி
உருகி ஒன்றென உதிர்ந்த
உப்புக் கரைசலின்
சுவையூட்டலா எந்தன் சோமபானம்
தொட்டுத் தொடர்தலும் முடிவாகி
விட்டுக் கொடுத்தலே விடையாகி
எனை விட்டுக் கொடுத்தபின்
நீயுமெனை விட்டுக் கொடுத்ததனால்
விடையற்ற நாட்களும்
வினாவற்ற நிகழ்வுகளும்
ஒரு சேர
பரிதவிப்புடன் வரையப்பட்ட
படபடத்த பக்கங்களின் திருப்புதலா
என் வாழ்க்கை…..
No comments:
Post a Comment