Wednesday, 29 July 2015

எங்கே எனது கவிதை


























முடிந்து போன கனாவொன்றின்
மலர்கள் பூத்த நந்தவனத்தின் மணம்
இன்று காலை பரபரப்பினிடை
மிச்சமிருந்தது

வாகனத்தின் முன்பாக
அசைந்து சென்ற காளையின் கொம்பில்
நேற்றிரவின் பனித்துளியொன்று
படிந்திருந்தது

தெருவிளக்கின் அடியில் நின்ற
தெரு நாயின் பற்களுக்குள்
பழச்சுவை கனிந்து
கலந்திருந்தது

விரலிடுக்கில் கனன்ற கங்கிலிருந்து
உதிர்ந்த சாம்பலினுள்
அந்நேரம் அணையத் தொடங்கிய நெருப்பு
மினுக்கியிருந்தது

உனது நினைவுகளில் மட்டுமே
உருவான எழுத்துக்கோர்வை மட்டுமேன்
இப்போது எனைவிட்டு
நீங்கியிருந்தது?

No comments:

Post a Comment