தற்புகழ்ச்சி கொள்ளாத
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தொலை நோக்குப் பார்வையை
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
கண்ணடைத்து உறங்குகையில்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
வானேறி புக்க
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
சோறுண்ணும்போது மரிக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
தனக்கு மிகவும் பிடித்த செயலான
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
வாழ்ந்தால் இவரைப் போல் வாழணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
வாழ்க எம்மினத் தலைமகனே
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!
No comments:
Post a Comment