Sunday 5 October 2014

தனது ரோஜா























புறப்பட்ட இடத்திலேயே மனக்கால்கள்
ஓடிக்களைத்து வந்து நின்றன.
மௌன இறைச்சலின் புழுதியங்கும்
வியாபித்திருந்தது.

சுற்றும் முகவரியற்ற மதில்கள்
பாதைகளை மறைத்திருந்தன.
வெறுப்பின் அயற்சியில் கால்கள்
சோர்வுற்றிருந்தன.

இளைப்பாற ஒரு பூவின் நிழல்தேடி
தளர் நடையிட்டன.
இருண்ட வானமும்
வறண்ட பூமியும் கொண்டு
பூக்களோ புறம் போயிருந்தன.

வரும்வரை வேறுவழியின்றி
முட்புதரின் நிழலில்
மூச்சிறைக்க நின்றன.

சட்டென நாசியைத் தொட்ட
மெல்லிய மலர்வாசம் பூத்த
ஒற்றை ரோஜாவின்
ஒய்யார வருகையுடன்
சடசடவென பொழிந்த வானத்து மழை நீரும்
புத்துணர்வை அள்ளி வீச
புதுத் தெம்புடன் கால்கள்
துள்ளிக் குதித்தன,

தனது ரோஜாவைச் சூடியபடி
மகிழ்ச்சிச் சிறகைப் பொருத்திக்கொண்டு
வானப்பாதையில் வட்டமடித்து
விரையத் தொடங்கின!

No comments:

Post a Comment