Sunday 1 September 2013

ஆணழகன்
















அவன் ஆணழகன்தான்,
அந்த கல்லூரி வளாகத்தில்
அத்துணை பேரிலும்
காண்பதற்கு கவர்ச்சியாய்
கண்களில் துடிப்புமாய்,
கால் முதல்
தலை வரை
வெளுப்புமாய்,
விலை உயர்ந்த காரிலே
வந்திறங்கினான்.

அத்தனை பேரையும்
ஒரு நொடி
திரும்ப செய்யும்
அழகு!
அவனைச் சுற்றி
ஈக்களாய் பலர்,
அத்துணை பேருக்கும்
அவன் ஹீரோ,
என்னவளைத் தவிர...

என்னவளின் உள்ளத்தில்
என்னைவிட அழகாய்
என்னைவிட அன்பாய்
என்னைவிட கவனிப்பாய்,
என்னைவிட கருணையாய்
என்னைவிட காதலாய்,
ஒருவரையும்
காணவில்லையாம்.


உடலழகும், விலையுயர்ந்த
உடையழகும்,
காரழகும், கவர்ச்சி மிகு
பேச்சழகும்
கவராத அவள்,
எனக்கே எனக்கென்று
எப்போதும் பூத்த மலர்
என்னிதய தேவதை!

எனக்கிதை விட
வேரென்ன வேணும்?

No comments:

Post a Comment