Tuesday 24 September 2013

வண்ணத்துப்பூச்சி










ல்லிகைப்பூவொன்று
மலையடிவாரத்திலெனை பார்த்து
மார்விம்மச் சொன்னது,
கடந்த பிறவியில்
நீயென்னை மணந்தாய்,
இப்பிறவியில்
ஏனென்னை களைந்தாய்?

அருகில் சென்று
அப்பூவின் மணம் நுகர்ந்து
அதன் காதில் சொன்னேன்,
இப்பிறவி மட்டுமல்ல,
எப்பிறவியிலும்
நானுன்னை களைவதுமில்லை,
நீயென்னை பிரிவதுமில்லை.

உருவத்தால் இணைந்தோர்
உடலால் பிரியலாம்,
உள்ளத்தால் இணைந்தோர்
உயிர் பிரிவரோ?

வாழும் பாதைகள்
வேறாகலாம்,
போகும் பயணங்கள்
திசை மாறலாம்.

எண்ணத்தில் ஒருமித்தோர்
எம்முகட்டில் மலர்ந்தாலும்,
எவர் பூச்சூடி மகிழ்ந்தாலும்,
என்னுள்ளம் நீயாக,
உன்னுள்ளம் நானாக,
என்றுமிருப்போம்

என்னுயிரே!

No comments:

Post a Comment