Monday 23 September 2013

நானாகி இருக்கிறேன்















நான் எழுதும்
எழுத்துக்களிலெல்லாம்
நீயிருப்பதாய் கொண்டேன்.
என் எழுத்துக்கள்
நீண்டு,
முடிவற்றதாய்,
வளர்ந்துகொண்டே இருந்தன!

என் எண்ணங்களின் முடிவில்
நீயிருப்பதாய் கண்டேன்.
எண்ணங்களும்
திசையற்று
திக்கெட்டும் பறந்தன.

என் வாழ்வில் உறுதியாய்
நீயுண்டென்று நம்பினேன்.
வாழ்க்கையின் தேடலும்
இனிமையாய்,
இளமையாய்,
புதுமையாய்,
தோன்றலாச்சு!

என் எழுத்தின் கருவாய்,
என் நினைவின் உருவாய்,
என் வாழ்வின் உயிராய்,
நீ இருப்பதால் தான்
நான் இன்று

நானாகி இருக்கிறேன்!

No comments:

Post a Comment