Sunday 29 September 2013

வண்ணத்துப்பூச்சி























என் வீட்டுக் குளியலரையிலோர்
வண்ணத்துப்பூச்சி,
எப்படி வந்தது?
இறக்கையடித்து
வெளியேறத் துடித்து
அங்குமிங்கும் அலைமோதி
அங்கோர் மூலையில்
அடங்கியது.
பிடித்து வெளியில்விட
யத்தனித்தேன்.

சிக்காமல் மீண்டும்
சிறகடித்து
சுவர்களில் மோதி மோதி
அடங்கியது.
குணவாசல் சாளரத்தின்
கதிரொளியை கண்ட பின்பு,
எப்படியேனும்
வெளியேறும்,
என் எண்ணங்களாய்...!

No comments:

Post a Comment