Sunday, 29 September 2013

நியாயங்கள்

புகலிடம் தேடாத
பூக்களாய் வாழ்ந்திடலாம்,
போர்க்களம் காணாத
மீன்களாய் நீந்திடலாம்,
காரிருள் கண்டாலும்
கண்ணிமை திறன் பெறலாம்.
யாரிடம் சென்றாலும்
என் நிலை நான் பெறலாம்,

நீர் நிலை மீதேறி
நடந்திடும் நாள் வரலாம்
ஓர் நிலை இல்லாது
உள்ளமும் தடம் விடலாம்
சேர் முறை சீராக
இல்லாத வாழ் பெறலாம்
நேர் நிலை நான் கொள்ள
நியாயங்கள் மீள் பெறலாம்!

No comments:

Post a Comment