Sunday 29 September 2013

முள்

























மிடறுகையில் தொண்டைக்குள்
முள்ளாய் சில நினைவுகள்,
எடுத்துதிர்க்கக் கைவைத்தேன்,
எட்டவில்லை, ஆழத்தில்,
என்றுமினி அங்கேயே
இருந்துவிடு தவறில்லை.
எத்தனையோ உறுத்தல்களில்
இதுவும் ஒன்றெனக் கொள்வேன்..!

No comments:

Post a Comment