Monday 2 September 2013

தேன்மொழியாள்






















இறைவனுக்கு மலர் தொடுக்கும்

என்னிதய தாமரையின்
இதழ்பரப்பும் புன்னகையில்
ஈர மின்னல் எனில் பூக்க



நீள்கரத்தால் மலர் தொடுத்து
நெஞ்சினிக்க பாட்டிசைத்து
நீள்விழியால் கணை தொடுத்து
என்மீது பாய்ச்சி விட்டாள்.

வானுறையும் கதிரவனின்
செங்கதிரில் மின்னுமவள்
தேன்மொழியால் எனை அழைக்க
தாவியவள் முன் நின்றேன்!

No comments:

Post a Comment