இறைவனுக்கு மலர் தொடுக்கும்
என்னிதய தாமரையின்
இதழ்பரப்பும் புன்னகையில்
ஈர மின்னல் எனில் பூக்க
நீள்கரத்தால் மலர் தொடுத்து
நெஞ்சினிக்க பாட்டிசைத்து
நீள்விழியால் கணை தொடுத்து
என்மீது பாய்ச்சி விட்டாள்.
வானுறையும் கதிரவனின்
செங்கதிரில் மின்னுமவள்
தேன்மொழியால் எனை அழைக்க
தாவியவள் முன் நின்றேன்!
No comments:
Post a Comment