தேவதை கூந்தல் வாசம்
தேனுண்ணும் வண்டு மயங்கும்.
நானதன் மென்மை கண்டு
தீண்டவே தேகம் சிலிர்க்கும்.
பாரதி பாடல் கண்ட
பெண்ணென மெல்லத் துலங்கும்.
ஈரடி குறளில் சொன்ன
அத்துணை குணமும் தஞ்சம்.
இருவிழி குளுமை காண
இதயமும் மெல்ல ஏங்கும்.
ஒருவிரல் தீண்டும் போதே
உள்ளத்தில் மின்னல் பூக்கும்.
உருகிய பாகைக் கொண்ட
உடலெனை கண்டு நோகும்.
பருகிட வந்த என்னை
பார்த்ததும் பாதம் மீளும்.
உதடுகள் சொல்லும் சேதி
உணர்ந்திட உள்ளம் நாடும்.
கதவினில் ஒளிந்து சொல்லும்
கண்களின் கவிதை வேண்டும்.
எனதுயிர் கொண்ட உந்தன்
இமைவழி துயில வேண்டும்.
என்மன வானில் வாழும்
இனியவள் நேச மென்றும்!
No comments:
Post a Comment