ஓரவிழிப் பார்வையிலும்
உதட்டோர சிரிப்பினிலும்
விரலசைவின் இசையினிலும்
விற்புருவக் கவிதையிலும்
கருமேகக் கூந்தலிடை
கலைந்தலையும் கற்றையிலும்
கன்னத்துக் குழிவாழும்
பொன்னிற வண்ணத்திலும்
உள்ளம் பறிகொடுத்து
உளறியதைக் காதலென
உள்ளம் சொன்னகதை
உண்மையில்லையடி!
எண்ணத் தெளிவானம்
எங்கும் மலர்வாசம்
உந்தன் உருவழகை
உயர்த்தும் செல்வமடி!
சிந்தை சொல் செயலும்
சிதறா நிலைகொண்ட
விந்தை பெண்ணிலவாய்
கண்டே காதலுற்றேன்!
No comments:
Post a Comment