Sunday 1 September 2013

ஓரவிழிப் பார்வை



ஓரவிழிப் பார்வையிலும்

உதட்டோர சிரிப்பினிலும்
விரலசைவின் இசையினிலும்
விற்புருவக் கவிதையிலும்



கருமேகக் கூந்தலிடை
கலைந்தலையும் கற்றையிலும்
கன்னத்துக் குழிவாழும்
பொன்னிற வண்ணத்திலும்

உள்ளம் பறிகொடுத்து
உளறியதைக் காதலென
உள்ளம் சொன்னகதை
உண்மையில்லையடி!

எண்ணத் தெளிவானம்
எங்கும் மலர்வாசம்
உந்தன் உருவழகை
உயர்த்தும் செல்வமடி!

சிந்தை சொல் செயலும்
சிதறா நிலைகொண்ட
விந்தை பெண்ணிலவாய்
கண்டே காதலுற்றேன்!

No comments:

Post a Comment