தேன்பலா சுவையெடுத்து
தித்திக்கும் இதழ் துடைத்து
வான்முகில் வரவழைத்து
விழியிரண்டின் இமைகூட்டி
எனை நோக்கும் இரு விழியும்
எத்தனையோ கதை படிக்க
முனைப்பில்லா விரலரிசி
முறத்தினிலே கோலமிட
தினம் கதவின் அருகிருந்து
தவிப்போடு பார்க்குமவள்
சினம் கொண்டு என்னோடு
சிலையாக இருக்கின்றாள்.
காரணத்தை யுடனறிந்து
கவலைகளின் திறனழித்து
ஆபரணம் புதிதெடுத்து
ஆரணங்கை மகிழ்விப்பேன்!
No comments:
Post a Comment