Sunday 22 September 2013

புகழ் பெறுவாள்


































மெல்லிதழாள் மென்மையுடை சொல்லுடையாள்,,
முள்ளுதிராள் மென்மனதில் பூஞ்சிறகாள்
நல்லுறவாய் என்னுயிரில் கலந்திடுவாள்,
பல்சுவையில் வாழ்வினிமை தந்திடுவாள்.

கண்துயிலாள் காதலனின் முன்னெழுவாள்,
வெண்ணிலவாய் என்னிரவில் பூத்திடுவாள்.
பெண்மயிலாள் மலர்வதனம் மின்னிடுவாள்.
கண்ணசைவால் காதலிசை பண்ணுறைவாள்.

நேர் வகிடாள் நெடுங்குழலில் பூவுடையாள்
தேர் நடையாள் தெவிட்டாத சொல்லுடையாள்
கூர்மதியாள் குறுஞ்சிரிப்பால் மனமினிப்பாள்,

பார்காணா பெண்ணெனவே புகழ் பெறுவாள்!

No comments:

Post a Comment