வாழ்வின் ரணங்களை
மீறிய சுகங்களை
உன்னிடம் மட்டுமே
அறிந்தேன்...
மயிலிறகாலான
பார்வை கொண்டு
என் மனதை
தடவியபோது,
திகட்டாத
தெள்ளமுது தமிழால்
எனை அன்பே என
அழைத்த போது,
மலரினும் மெல்லிய
விரல் நுனி
என் தலை முடியை
கோதிய போது,
ரோஜா மலரின்
வாசம் கொண்ட
உன் சுவாசம்
என் மேல் பட்ட போது,
எத்தனை பிறவி
வேண்டுமானாலும்
இதற்காகப் பிறப்பேனடி,
என் பிரிய சகியே!
No comments:
Post a Comment