நீ என்னுடன் இருக்கும்
அந்த இணையில்லா நிமிடங்களில்
உன் எழில் முகத்தில்
வானவில்லின்
வர்ண ஜாலங்களை
பார்க்கிறேன்,
வீசும் தென்றலின்
சுகந்தத்தை உன்
சுவாசத்தில் மீட்கிறேன்.
புன்னகை கண்டு
நான் விண்ணிலே பறந்திட
வியக்கிறேன்.
என்னதான் உன்னிடம் இப்படி
ரகசியம்? கேட்கிறேன்.
என் கரம் பற்றி என் தோள்களில்
சாய்ந்து நீ சொல்கிறாய்.
என் மனப் பூமியில் உன் விதை
வீழ்ந்ததால் தானடா!
No comments:
Post a Comment