Thursday 26 September 2013

கவிபேசும் விழி




கருவிழியின் மொழியுதிரும் கவிதைகளும்

கனியமுதத் தேன்குடித்த இதழ்மொழியும்.
நறுமண தெ ன்றல்தவழும் பூமணமும்,
நானிருக்கும் திசைத்தேடி தவழ்ந்து வரும்.



வீணையுன் விரல்தேடி வாடுதடி,
வீதியுலா பூங்காற்றும் நாடுதடி,
மானின் மருள்விழிகூட நாணுதடி
மங்கையுன் கவிபேசும் விழிகளடி!

சேலைக்குள் சோலையெனும் சித்திரமே.
செம்பவள தேன்குழைத்த பொற்சரமே,
நாளையென் வாழ்வினிக்கும் பூமணமே!
நங்கையுன் விரல்கோர்த்து வாழ்ந்திடவே!

No comments:

Post a Comment