Sunday 22 September 2013

இதய வலி



இதழின் வலி 

இதழ்கூட அறியாமல்
அடைகாக்கும் எனக்கு
இதயவலி சுமந்து
உனக்கும்கூட உணர்த்தாமல்
உயிர்வாழ
முடியாதா?
விழியின் நுனிகளில்
துளிர்க்கும் கனவுகளின்
தீரம் குறைத்து
தீனக் குரலாய்
தெளிக்க அறியேனா?
சம நிலை கொண்ட
பிரதேசம் கடந்து
ஏற்ற இறக்க 
இடைஞ்சல்கள் மறந்து
வாழ்வின் சிகரம்
அடையும் நாளில்
உண்மை உணர்வுகள் காண
உனக்குள் ஒளிவேன்
அந்நேரம்...!

No comments:

Post a Comment