இதழின் வலி
இதழ்கூட அறியாமல்
அடைகாக்கும் எனக்கு
இதயவலி சுமந்து
உனக்கும்கூட உணர்த்தாமல்
உயிர்வாழ
முடியாதா?
விழியின் நுனிகளில்
துளிர்க்கும் கனவுகளின்
தீரம் குறைத்து
தீனக் குரலாய்
தெளிக்க அறியேனா?
சம நிலை கொண்ட
பிரதேசம் கடந்து
ஏற்ற இறக்க
இடைஞ்சல்கள் மறந்து
வாழ்வின் சிகரம்
அடையும் நாளில்
உண்மை உணர்வுகள் காண
உனக்குள் ஒளிவேன்
அந்நேரம்...!
No comments:
Post a Comment