Saturday 28 September 2013

பாசம்

நண்பன் ராஜேஷ் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து 3 மாதங்கள் ஆயின. நல்ல சம்பளம். நல்ல வேலையும் கூட, எல்லாம் சுகமாக போய் கொண்டிருந்தது.
ஒரு நாள் அவன் கைப்பேசியில் அழைத்த அவனது தந்தை, பதட்டத்துடன் சொன்னார், “அம்மாவுக்கு ரொம்ப ஸீரியஸ்.ஆசுபத்திரியில அட்மிட் பண்ணியிருக்கோம்”
அவ்வளவுதான், இவன் கைப்பேசியை கீழே தவற விட்டான். கண்ணில் நீர் ஆறாகப் பெருகியது. அவ்வளவு பாசம் அம்மா மேல். உடனே அவனது மேனேஜருக்கு தொல்லைபேசி, விடுப்பு எடுத்து அடுத்த விமானத்தில் பறந்து சென்று அம்மாவின் அருகில் இருந்து 15 நாட்கள் கவனித்துக் கொண்டிருந்து குணமானதும் மீண்டும் வேலைக்கு போனான்.
அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு முறை அம்மாவுக்கு ஸீரியஸ் ஆக, இம்முறை தயங்கி தயங்கி விடுமுறை வாங்கி ஓடி வந்தான் அம்மாவைக் காண.
அடுத்த மாதம் மீண்டும் அம்மாவுக்கு ஸீரியஸ். என்ன செய்வான்?
அதே அம்மா. அதே பாசம். ஆனால் இப்போது......?
எப்படியோ விடுமுறை எடுத்து வந்தான். பார்த்து சென்றான். நல்ல வேலை, நல்ல சம்பளம், விடவும் மனசில்லை.
அடுத்த முறையும் அம்மாவுக்கு ஒரு மாதத்தில் ஸீரியஸ் நிலைமை வந்தால் என்ன செய்வான்?

No comments:

Post a Comment