காலடி யோசைக் கேட்டு
கழுத்தை நீட்டி உனைக்
காணத் துடிக்கும்
மலர்களுமென்
மனதைப் போல
மகிழ்ந்தாடி
பாதவிரல்
பார்வையிலே
பட்ட உடன்
பரிதவித்து,
கீழ்கண்டை கண்டு
முறுவலித்து
இடை வரையில் கண்டு
இன்புற்று,
முழு நிலவின்
ஒளி கொண்ட
தேவதையின் முகம் கண்டு
இனம் புறியா
ஏக்கத்தை வெளியிட்டு
என் நிலையை அவளுக்கு
உணர்த்தியதோ?
அவளெந்தன்
அடுத்து வந்து
தளிர் கரத்தால்
மலர் பறிக்கும்
மென்மையுடன்
விரல் பிடிக்க
மலர்களும் வெட்கித்
தலை கவிழ்ந்து
நின்றதன்றோ...!
No comments:
Post a Comment