Sunday 1 September 2013

வரவேற்பு












காலடி யோசைக் கேட்டு
கழுத்தை நீட்டி உனைக்
காணத் துடிக்கும்
மலர்களுமென்
மனதைப் போல
மகிழ்ந்தாடி
பாதவிரல்
பார்வையிலே
பட்ட உடன்
பரிதவித்து,

கீழ்கண்டை கண்டு
முறுவலித்து
இடை வரையில் கண்டு
இன்புற்று,
முழு நிலவின்
ஒளி கொண்ட
தேவதையின் முகம் கண்டு
இனம் புறியா
ஏக்கத்தை வெளியிட்டு
என் நிலையை அவளுக்கு
உணர்த்தியதோ?

அவளெந்தன்
அடுத்து வந்து
தளிர் கரத்தால்
மலர் பறிக்கும்
மென்மையுடன்
விரல் பிடிக்க
மலர்களும் வெட்கித்
தலை கவிழ்ந்து

நின்றதன்றோ...!

No comments:

Post a Comment