Sunday 27 October 2013

விக்கல்




















திடுமென வந்தது விக்கல்,
உண்ட சாதம் புறம் சாட,
உடையெல்லாம் சேதமாக,
அடுத்திருந்த அம்மா
அவசரமாய் நீரெடுத்து தந்தாள்.
அருகில் வந்து
தலை தட்டி கேட்டாள்,
“யாரடா உன்னை நினைப்பது?”
அப்போதும் நிற்காத விக்கலை
நிறுத்த வழியின்றி,
எழுந்து ஓடினேன்,
குதித்து சாடினேன்.
கட்டிலில் உருண்டேன்,
அத்தனைக்கும் நிற்காததால்
உன் கோப முகத்தை
நினைவு கூர்ந்தேன்.
அடுத்த நொடி விக்கல்
அமைதியானது,
என்னைப்போல….!

No comments:

Post a Comment