Thursday 24 October 2013

குரங்கின் மனம்
















நட்பின்பால் என்னிலை
நியாயப்படுத்தப்படவில்லை.
அன்பினால் என்னிலை
அன்னியப்பட்டுப்போனது.
ஆயினுமென்ன,
அசட்டு மனம்
அன்பிற்கே ஆட்பட்டு
ஆசையின் வசப்பட்டு
இடிபட்டும்,
உதைபட்டும்,
இழிபட்டும்,
இனியும்
குரங்கின் மனமாய்
குதூகலித்து நிற்குதே!

No comments:

Post a Comment